எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்

எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்
வயது 18 மாநிறம்

Tuesday 30 March 2010

இயக்குனர் "மீரா கதிரவன்" பேட்டி (அவள் பெயர் தமிழரசி)

 "விளம்பரம்" இதழ் (கனடா) Dec 15, 2009
நேர்காணல்: பாலு சத்யா


குறிப்பு:



ஒவ்வொரு வண்ணத்தையும் தனித்தனியாக படிக்கவும்.. :-)


Click Each Color to read in big fonts












Monday 15 March 2010

பத்திரிகை விமர்சனங்கள் Magazine Criticisms



வண்ணத்திரை

(Click the image to read in big font)


The New Indian Express
(Click the image to read in big font)

கல்கி
(Click on image to read in big font)

தினகரன்
(Click on image to read in big font)

The Hindu
(Click the image to read big fonts)

Saturday 27 February 2010

Meera Kathiravan Interview for "Behind the woods"

The Mind of Meera Kathiravan

Director Meera Kathiravan is making his debut with Aval Peyar Tamizharasi. The film which is set in Tirunelveli will bring out the colors of love alive in true rustic flavor. The film which is soon to release in India was screened at Dubai Film Festival and received a standing ovation. We catch up with the talented young director.



I was inspired to get into films by good cinema. I wanted to make good films like the ones that I had seen and like the directors who influenced me, I too wanted to influence the audience.”


Have you had any kind of formal training?
No, I never had formal training. I entered the film industry in 1998 but since I came from the village, I had no knowledge of cinema. However, when I came here, I made good friends and met good directors. The directors whom I worked for trained me for cinema the correct way.
           
Do you think the lack of formal training from an institution is a disadvantage?
Definitely not. Cinema does not come through learning, it’s a plus to study at an institution but cinema is an art form that comes through observation. In today’s cinema, directors like Selvaraghavan, Venkat Prabhu have not studied in any institution. I am not saying it is wrong to study in an institution, just that if you observe cinema the right way is enough.

How did you receive your initiation into Tamil cinema?
I came into it in 1998 and aspired to become a director in 5 years but it took me that time to reach the position of Assistant Director. I started writing short stories in magazines. I wrote a small piece on the film Azhagi which was released in a Tamil literary magazine called Kanaiyaazhi. After reading this my friends were very impressed. Then, Va. Gauthaman who has directed serials like Sandana Kaadu, Auto Shankar, the film Kanavey Kalaiyathey and now Magizhchi helped me reach Thankar Bachchan. He read my short stories and was impressed and I joined him.

Tell us about your experience with Thankar Bachchan?
The period I joined him was the time I was reading books and writing stories. While working with him, I understood that a script is not just about what you think or just about writing dialogues but that one should work in detail. Cinema is completely a powerful media and he helped me learn that.

How was it working with Director Lohita Das?
I had always liked his films a lot and he was the film-maker whose films I have watched the most. When I heard that he was going to direct a film in Tamil, I approached him. It so happened that he also needed someone who knew Tamil and Malayalam as an assistant. Since I knew a bit of Malayalam, I was accepted. That was the best period of my life in cinema and very fulfilling.

How many films did you work with him?
Just one film.

How was your experience working with Director Balu Mahendra?
Balu Mahendra is like my father; he treated me like a son. Beyond the fact, that he is a good filmmaker and director. His best quality is that even if someone has entered films recently, he would encourage and praise that person. I met Balu Mahendra while he was planning to make a tele-serial titled Kathai Neram for Sun TV. He wanted to use one of my short stories Mazhai Vaasam that had appeared in the Tamil magazine Kalki. We had a very healthy meeting and discovered that we were on the same wavelength. After that, he allowed me to participate in many of his discussions. He also gave me the opportunity to write the screenplay of Adhu Oru Kana Kaalam and Azhiyatha Kolangal into books.
      
All the directors you have worked with have usually had complex scripts with many shades. Will today’s audiences accept this?
The audience will always accept. They have never said they won’t accept a particular kind of film, there are no limitations. From the days of Parasakthi, Poove Poochooda vaa to Pasanga by Pandiraj which was only with children were hits. The Tamil audience wants their hearts to be touched. They should like the film and would like it to reflect their lives. A film and that the 2 ½ hours should be useful.

Since 1998, you have been in cinema. Have you been discouraged at any point and thought of giving up?
Yes, at times. I did not have any cinema background. I am the first in my family to enter cinema and from a village in Tirunelveli which is green and prosperous. After that, living in a city like Chennai called for lot of compromises. There were times when I have waited 2 years for directors who promised to take me on but due to their circumstances were unable to do so. At these times, my reading and writing habits gave me solace. I had the stamina to hold on for five years and after that the directors encouraged me and till today they appreciate me well. Good friends and books helped me stick on.

What is the story of Aval Peyar Tamizharasi?
When people hear the title they think it’s a female-oriented story but its not. It’s the story of a man who says the line, who he is, how she came into his life as a friend and as a lover and how she influenced his life in equal proportion as his mother. We trace his life story from 8 to 30 – the story of a boy born in a village and who grows up with his grandfather.

What is Jai’s Character in the film like? Is he rough and tough?
No, Jai has a soft character, you will even wonder if it’s really Jai who is enacting this role. He does not have much of dialogue; in fact if you write down all his dialogues in the film on a piece of paper, you will find that it will run to just 20 to 25 pages. He has shown his performance in his expressions, eyes and struggle. However you cannot classify it as a totally soft film either. It has Panchalamkurichi Padapadakka, Puliyankotta Thadthadakka, a peppy Kuthu song from Vijay Anthony and a comedy track. One portion is very fun and the other serious.
           
Do you think that there is an expectation to see Jai as a tough hero?
No, the audience will not expect that from any hero. All fans want to see their hero donning a variety of roles.

How did you choose Nandagi as your heroine?
Nandagi is making her debut with this film. She has a bright future as a heroine. She has a prominent place in the list of actresses who can speak Tamil and know to act. The producer and I were looking for a heroine for one year and were particular that since the title had Tamil, we wanted a Tamil speaking girl with a Tamil face. Before starting the film, I had made a trailer in which she starred and since she had performed well I had promised her a role in one of my films. Then I thought, why not use her for this film as she was right for the character.

How did u decide on this theme for your debut film?
I was very stubborn that this should be my debut film because in the 78 years of Tamil cinema, we have touched areas that have never been touched. The story’s background, characterization and many things will be new. It’s a bold attempt and I think as a debut director I am confident that I will receive appreciation for it. I must thank my producer Dhananjayan as I don’t know if the film would have turned out so well if I had any other producer.

How was the response in the Dubai Film Festival?
The response in the Dubai Film Festival was overwhelming and I must again thank my producer Dhananjayan for making it happen. As the release got delayed, I came to the point that I just wanted the film to release. He took the initiative and took it to the festival. We had two shows and the audience consisted of people with their roots in Ramnad, Trichy and Madurai. They were average cinegoers and after seeing the film the whole theater stood up and clapped. They said that the director and Moser Baer who produced it have good future. It’s customary that the audience at the festival is given a coupon at each show that contains stars to rate the film. When we collected the filled coupons, we were happy to find that 96% rated it very excellent.

Is there any genre you want to stick to?
Life is a creator as powerful as cinema. Though life has its positives and negatives, one must give the audience something positive. Above all only love can win in this world. My genre is this.

Tell us about your cameraman P.G. Muthiah?
My cameraman had done Moser Baer’s production Poo and Kandein Kaadhalai where he had exhibited his talent and this is his third film. He has done a lot of hard work with three different kinds of camera angles, lighting and expression for the 3 different periods in the film. I am sure that this will prove to be an important film in his career.

There are some directors who like to go to the spot and write there while there are others with a ready script. Which category do you fall into?
I do not agree with the idea of going to the spot and writing. A film shoot calls for an expenditure of approximately 1 and half lakhs a day. A producer invests his trust in the director and one has to be responsible. If an average auto driver or farmer toils for 5 years, only then can he earn and save that amount to get his daughter married. So when I am responsible for it, if I go to the spot not knowing what I want and spend 3 ½ hours writing there, that would not be the right thing to do. One should have the script written properly before reaching the shooting spot.
           
Share with us about the music in the film?
Music is by Vijay Antony who is very good. Everyone thinks he can only do Kuthu songs but he has broken the mould by doing folk songs in this film. He was waiting for a chance to show this side of his talent. When I met him with the story, he accepted and his work has me 100% satisfied. The re-recording was much appreciated.

What gives you the confidence about the film?
I trust the Tamil audience. Even at the All India level, they form a healthy audience. From Parasakthi to Pasanga, people have appreciated good films. If a film is good, they are ready to make it a success. I trust them.

What are your future plans?
Two films are in the offing, one is a complete action film though it won’t be a formula film but rather realistic, something like Polladhavan. The other is an out-and-out comedy.

Have the titles and stars been finalized?
No, the titles are not finalized yet. We are speaking to some stars and they will be finalized in a few weeks.

"என் பெயர் ஜெயராவ்" அவள் பெயர் தமிழரசி நடிகர்

பிறப்பு: 06:05:1966
குடும்பம்: அப்பா வெங்கையா; அம்மா விஜயம்மா. தம்பிகள் டேவிட் & சுகுமார். தங்கை சுஜாதா. மனைவி உஷா இல்லத்தரசி, மகன்கள் ஜான்சன் ராவ் & ராகுல் ராவ் (பள்ளி மாணவர்கள்)
சொந்த ஊர்: "தம்பிரெட்டிபல்ல" நெல்லூர் மாவட்டம்.
இதுவரை: நடிகர்,Theatre Lab நிறுவனர், நாடக இயக்குனர் & நடிப்புப் பயிற்சியாளர், திரைப்படங்களுக்கு Casting Director.
இயக்கிய நாடகங்கள்:
"மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்"
(Walter E. Schafer எழுதிய நாடகத்தை தழுவியது)
"சங்கீத பைத்தியம்" (பம்மல் சம்பந்த முதலியார்)
"நதி அறியாது" (எஸ் ராமகிருஷ்ணன்)
"மஹாவுடன் பத்து நாட்கள்" உண்மைச்சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டது

கலை ஆர்வம்..

எங்கள் ஊர் கலை செழிப்புள்ள து. சிறு வயதில் சங்கராந்தி (பொங்கல் ) காலங்களில் நடத்தப்படும் "போலேரம்மா", முறம், துடைப்பம் கொண்டு "மாதங்கிகள்" ஆடும் நடனம் இவற்றை எல்லாம் பார்ப்பது எனக்கு ஆர்வமாய் இருந்தது. எட்டாம் வகுப்பு படிக்குபோது நானே ஒரு நாடகம் எழுதி இயக்கி னேன். அதை பார்க்க ஊரே திரண்டுவிட்டது. என் ஆசிரியர்கள் எல்லாம் "எனக்கு ஏன் ஒரு வேடம் கொடுக்கவில்லை..?" என்று கோபித்துகொண்டார்கள். அதை தொடர்ந்து ஒவ்வொரு வருட விடுமுறையிலும் ஒரு நாடகம் போட்டேன். நாடகங்களிலும் நடிப்பிலும் எனக்குப் பிடித்த ஏதோ ஒன்று இருக்கிறது எனபது தெரிந்தது. நாடகத்தின் மூலம் இளைஞர்களை நல்வழிப்படுத்த முடியும் என்பதை தெரிந்துகொண்டேன். சென்னையில் நான் தங்கி இருந்த இடம் ரௌடிகளின் கூடாரமாக இருந்தது. முதலில் Students Federation of India (SFI)-ல் சேர்ந்தேன். பின்னர், Young Star Association என்ற அமைப்பைத்தொடங்கி அங்கிருந்த இளைஞர்களை நல்வழிப் படுத்தினேன். இதைப்பார்த்த ஜனோதயம் என்ற NGO, என்னை முழு நேர சமூக சேவகனாக தங்கள் அமைப்பில் செர்த்துக்கொண்டது. தொடர்ந்து நாடகங்கள் மூலமாக பொதுமக்களையும் நல்வழிப்படுத்தினோம்.


கூத்துப்பட்டறை..?

நாடகத்திலும் நடிப்பிலும் அடுத்த கட்ட பயற்சி கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று நினைத்தேன். ஜனோதயம் நிறுவனத்தில் செயலாளராக இருந்த பல்குணன் என்பவரின் அறிமுகத்தில் K.C.மனவேந்தர் நாத் என்பவரின் நட்பு கிடைத்தது. நாடகங்களில் ஈடுபாடு கொண்டவராக இருந்தார். நாடகத்தில் நான் கொண்டிருந்த ஈடுபாட்டையும் ஆர்வத்தையும் உணர்ந்த அவர் என்னை கூத்துப்பட்டறைக்கு அழைத்துச் சென்றார். 1988-ல் ந.முத்துசாமி அவர்களை சந்தித்தேன். கூத்துப்பட்டறையின் முழுநேர நடிகர்களின் முதல் Batch-ல் நானும் ஒருவன். பிரசாத், லாரன்ஸ், ஜெயகுமார், பசுபதி, கலைராணி, நான் (ஜெயராவ்) எல்லோரும் அங்கு முழு நேர நடிகர்கள். அருமையான பயிற்சி கிடைத்தது. நடிப்பு மட்டுமின்றி, நாடகம் தயாரிப்பதில் உள்ள நுணுக்கங்களையும் தெரிந்துகொண்டேன். 1988-ல் "நற்றுவனியப்பன்" நாடகம் தொடங்கி பல நாடகங்களில் விதவிதமான வேடங்களில் நடித்தேன்.

ஒரு நடிகனுக்குத்தேவயான அங்க அசைவுகள் (body language), குரல் பக்குவம் (voice culture), Martial Arts, Folk dance, fitness, flexibility உள்ளிட்ட அனைத்து பயிற்சியும் கிடைத்தது. ஒரு கதாபாத்திரத்தை எப்படி உள் வாங்கிக்கொள்வது, ஒரு கதாபாத்திரத்திற்கு தேவையான உளவியல் தேடல் (Psychological study) என்றால் என்ன என்பதையும் அங்குதான் கற்றேன். எந்த வேடமாக இருந்தாலும் செய்வதற்கு கூத்துப்பட்டறை பயிற்சி உதவுகிறது. இன்றைக்கும் இனிமேலும் நான் உற்சாகமாகவும், ஆர்வமும் குறையாத நடிகனாக இருக்கிறேன் என்றால் அதற்கு கூத்துப்பட்டறை பயிற்சியும் அனுபவமும் முக்கிய காரணம். எதிர்மறையான வாழ்வியல் அனுபவங்களும் மனிதனை பக்குவப்படுத்துகின்றன என்பதையும் அங்குதான் கற்றேன்.

சினிமாவில் நடிப்பதை தவிர்த்துவரக் காரணம்...

உண்மயான கலை, நாடகங்களில் முறையான பயிற்சி பெற்ற எனக்கு, எந்த கதாபாத்திரமானாலும் உள்வாங்கி இயல்பாக நடிக்கவரும். நாடகங்களில் விதவிதமான வேடங்கள் செய்திருக்கிறேன் . காமெராவும் பெரிய திரையும் நிச்சயம் ஒரு பிரம்மிப்பை தருகிறது. நானும் ஒரு ரசிகன். ஆனால் என்னை நான் திரையில் பார்க்கும்போது, வழக்கமான பார்த்து சலித்த ஒரு வேடமாக இல்லாமல், என் நடிப்பு ஆற்றலுக்கு சவாலான வேடங்கள் செய்ய விரும்பினேன். என் நடிப்பின் மீதான ஈடுபாடு அடுத்த கட்டத்திற்கு செல்லும்போது அது ஒரு நல்ல வேடமாக இருக்க வேண்டும் என்று காத்திருந்தேன்.

அவள் பெயர் தமிழரசியில் நீங்கள்..?

"கஸ்தூரிமான் (2005)" படத்திற்குப் பிறகு இயக்குனர் லோகிததாஸ் எடுக்க நினைத்த ஒரு படத்தின் கதை நாயகன் வேடத்திற்கு நான் பொருத்தமாக இருப்பேன் என்று லோகிததாசிடம் எழுத்தாளர் ஜெயமோகன் சொல்ல, லோகிததாஸ் அழைப்பில் அவரது அலுவலகத்திற்கு போனேன். அப்போது மீராகதிரவன் லோகிததாசின் இணை இயக்குனர். (இது அவர் சொல்லித்தான் எனக்குத் தெரியும்.) என்னை அங்கு பார்த்த நினைவில் "அவள் பெயர் தமிழரசி"யில் எனக்கு ஒரு வேடம் இருப்பதாக சொன்னார். நான் அவரை சந்தித்தேன். கதை சொன்னார். என் வேடத்தைவிட எனக்கு "அவள் பெயர் தமிழரசி" கதைக்களம் மிகவும் பிடித்துவிட்டது. இப்படிப்பட்ட கதைகளில் நடிக்கத்தான் நான் இவ்வளவு நாட்களாய் காத்திருந்தேன்.

ஜெயராவ், மீனாட்சி, ராதா & வீரசந்தானம்

மீரா கதிரவனுக்கும் ஜெயராவுக்குமான நட்பைவிட, ஒரு இயக்குனருக்கும் நடிகனுக்குமான உறவு ஒரு படி உயர்வானது. இந்த வேடம் நீங்கள் செய்ய வேண்டும் என்று என்னிடம் பொறுப்பை ஒப்படைக்கும் ஒரு உறவு எவ்வளவு உன்னதமானது. நான் அந்த நம்பிக்கையின் உன்னதத்தை உணர்ந்துகொண்டேன். அந்த உறவை எப்படி காப்பற்றிக்கொள்ளவேண்டும் என்பதையும் அறிவேன். ஒரு நண்பன் என்பதை விட ஒரு இயக்குனராக அவர் என் மனதில் உயர்ந்து நிற்கிறார். படப்பிடிப்பின்போது அவருக்கு நேர்ந்த சவால்களை எதிர்கொண்ட விதம், சமாளித்த விதம், எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் படம் எடுப்பதில் அவருக்கு இருந்த தெளிவு, நிதானம், இவை எல்லாமே என்னை கவர்ந்தன. கடமையைச் செய்வதுகூட சாதனை ஆகலாம் ஆனால் போராடி பெறுவதுதான் உண்மையான வெற்றி. மீரா கதிரவனின் போராட்ட குணம் கண்டு ஒரு நண்பனாகவும் நடிகனாகவும் பிரம்மித்தேன். மீராகதிரவன் ஒரு வெற்றியாளனாக வருவதற்கான முன்னோட்டத்தை நான் படப்பிடிப்பில் கண்டேன். நான் வேலை செய்த இயக்குனர்களிலேயே மீராகதிரவன் ஆச்சரியமானவர் அசாத்தியமானவர்.


நடிகராக விருப்பம்கொள்ளக் காரணம்?

நடிப்பு மட்டுமல்ல, என்னை பொறுத்தவரை Art is a positive ideology. உலகின் உன்னதமான பணிகள் என்னவென்று கேட்டால் இசை, நடனம், ஓவியம், எழுத்து, நடிப்பு என்று சொல்வேன். இவை எதுவும் ஆர்வம், அர்ப்பணிப்பு, ஈடுபாடு இல்லாமல் செய்யமுடியாது. இசை இந்த உலகை அழகாக காட்டுகிறது, நடனம் ஆடுபவன் ஒரு சந்தோசமான உலகை காட்டுகிறான், எழுதுபவன் இயற்கையை அழகாக வர்ணிக்கிறான். எல்லாமே Positive energy. இவர்கள் யாருமே பொய்யாக தங்கள் வேலையை செய்யமுடியாது. நல்லதை சொல்பவன்தான் உண்மையான கலைஞன். அவன்தான் வாழ்க்கை மீதான நம்பிக்கையை கொடுக்கிறான். உலகை வாழத்தகுந்த இடம் என்று எடுத்துக் காட்டுகிறான். பொய்யான ஒன்றை சொல்பவன் கலைஞன் ஆக முடியாது. உண்மையான கலைஞன் காலத்தால் அழியாமல் இருப்பான். நானும் ஒரு கலைஞன், நடிகன். நடிப்பை என் தொழிலாக கொண்டதை நான் பெருமையாக நினைக்கிறேன். எந்த வேலையை செய்தாலும் ஒரு தியானமாக (Meditation) செய்யவேண்டும். ஈடுபாட்டோடு செய்யப்படும் எந்த வேலையும் சிறந்த பணியாகிறது. என்னிடம் நடிப்பு பயிற்சி பெரும் நடிகர்களுக்கும் இதைத்தான் சொல்கிறேன். Performance is everywhere but place is different. When you realize that, you may know how to present yourself in a better way.


இனி ஜெயராவ்...?

மசாலா படங்களையும், வெளிநாட்டு படங்களையும் மட்டும் பார்த்துவிட்டு படம் எடுக்க வந்த காலம் மலையேறிவிட்டது. இப்போது இயக்குனர்களாக வரும் இளைஞர்கள், கிராமங்களில் வாழ்ந்து, உண்மையான மனிதர்களையும், நம் கலை, கலாச்சாரம் இவற்றின் மதிப்பை தெரிந்தவர்களாகவும் இருக்கிறார்கள். நல்ல இலக்கியம், நாவல், கவிதை இவற்றில் ஆர்வமும் ஈடுபாடும் உள்ளவர்கள் இயக்குனர்களாக வருகிறார்கள். வசனங்களையும் வாய் சவடால்களையும் நம்பாமல் மனித மனங்களையும் அழகிய உணர்வுகளையும் திரையில் சொல்ல முற்படுகிறார்கள். இவர்கள்தான் உண்மையான படைப்பாளிகள். இவர்களிடம் புதுப்புது கதைகளும் கதைக்களங்களும் இருக்கின்றன. இப்படிப்பட்ட இயல்பான கதைகளைத்தான் மக்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். இந்த படங்களில்தான் எனக்கு வேலை இருக்கிறது. காலம் கனிந்து வந்திருக்கிறது. இனி எனக்கு சரியான வேட்டை காத்திருக்கிறது.

Thursday 25 February 2010

இயக்குனர் பேட்டி "ஆனந்தவிகடன்" (3-March-2010)

Director Meera Kathiravan (Aval Peyar Tamilarasi) interview on Anandavikatan dated 3 March 2010

இயக்குனர் பேட்டி ஆனந்தவிகடன்(3 March 2010) பெரிய எழுத்துக்களில் படிக்க நிழற்படத்தை சொடுக்கவும் (Click)

Please click on the photo to read


Please click on the photo to read

பெரிய எழுத்துக்களில் படிக்க நிழற்படத்தை சொடுக்கவும் (Click)

Sunday 21 February 2010

"என் பெயர் முத்தையா" அவள் பெயர் தமிழரசி ஒளிப்பதிவாளர்



பிறப்பு: 12.09.1982
சொந்த ஊர்: துறையூர் (திருச்சி மாவட்டம்)
படிப்பு:Bsc.(VisCom).,
MA (Journalism & masscommunication)
MBA(Human Resourse Management)
Msc.(Media Managemant)
குடும்பம்: அப்பா: கோபாலரத்தினம்; அம்மா: பிரேமா குமாரி

கற்றுத்தந்தவர்கள்: ரவி .கே. சந்திரன், ரவிவர்மன், கதிர், ராஜரத்னம்

இதற்கு முன் வெளியான படங்கள்: பூ (2008), கண்டேன் காதலை (2010)
அவள் பெயர் தமிழரசி படத்திற்க்கான கதைக்கு இறுதி வடிவம் கொடுத்த பிறகு படத்தின் கதை சுருக்கத்தை சொல்லும் Trailer படம் எடுக்க நினைத்து மீராகதிரவன் ஒரு ஒளிப்பதிவாளரை தேடிக்கொண்டிருப்பதாக நண்பர் சொன்னார். சுப்ரமணியபுரம், கற்றது தமிழ் ஒளிப்பதிவாளர் கதிரிடம் உதவி ஒளிப்பதிவாளராக வேலை செய்துகொண்டு இருந்தபோது, நண்பர் ஹரி மூலமாக மீரா கதிரவனின் அறிமுகம். மிகக் குறைந்த வசதிகளுடன் கஷ்டப்பட்டு Trailerஎடுத்தோம். அதன் பிறகு நான் கிட்டத்தட்ட மறந்துவிட்டேன். திடீரென ஒருநாள் மீரா கதிரவன் Phone செய்து, Moser Baerநிறுவனம் படத்தை தயாரிக்க முன் வந்துள்ளதாகவும் என்னையே ஒளிப்பதிவாளராக தேர்வு செய்திருப்பதாகவும் சொன்னார். அவள் பெயர் தமிழரசியில் பணியாற்ற அழைத்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. மிகவும் சந்தோசப்பட்டேன்.

அவள் பெயர் தமிழரசி படத்தை தயாரிப்பதற்கு முன்பு Moser Baer நிறுவனம் "பூ"படத்தை தயாரித்தது. மீரா கதிரவன் "பூ" படத்திற்கு ஒளிப்பதிவாளராக என்னை சிபாரிசு செய்தார். அவள் பெயர் தமிழரசி படத்தின் Trailer-ஐ பார்த்த இயக்குனர் சசி, "பூ" படத்தில் பணியாற்ற அழைத்தார். அதனால் "பூ" படம் என்னுடைய முதல் படம் ஆயிற்று.


அவள் பெயர் தமிழரசி படத்திற்காக நிறைய கஷ்டப்பட்டோம். படத்தில் நான்கு கட்டங்களில் கதை சொல்லப்பட்டுள்ளது. கதாநாயகனின் குழந்தைப்பருவம் வறட்சியாகவும், வளரும் பருவத்தில் கொஞ்சம் மழை, பசுமை போன்றவற்றையும் காட்டியிருக்கிறோம். அதன் பிறகு வாலிபவயதை முழுக்க முழுக்க பசுமையாக காட்டியிருக்கிறோம். அதற்காக வயல்வெளிகளிலும் பசுமையான இடங்களிலும் Shooting நடத்தினோம். கதாநாயகன் நாயகியை தேடி அலையும் காட்சிகளில் கொஞ்சம் Warm Colours (கதாநாயகன் Tiredness-ஐ காட்ட) பயன்படுத்தி இருக்கிறோம்.

இப்படி வெயில், மழை, வயல்வெளி என்று Shooting செய்வதற்கு நாங்கள் ஏற்பாடு செய்தால், அதற்கு நேர்மாறான காலநிலை (Climate) வந்தது. கஷ்டப்பட்டு Shooting எடுக்க வேண்டி இருந்தது. எனினும், எங்களுக்கு நிறைய நேரம் கிடைத்தது. இயக்குனரிடம் இருந்து முழு ஒத்துழைப்பு கிடைத்தது. தயாரிப்பாளர் தனஞ்சயன் மிகவும் துணையாக இருந்தார். தயாரிப்பில் உள்ள கஷ்டங்களையும், தொழிலாளர்களின் கஷ்டங்களையும் புரிந்துகொண்டார். அதனால்தான் படம் நன்றாக வந்துள்ளது. ஒரு அருமையான படத்தில் வேலை செய்ய வாய்ப்பளித்த தயாரிப்பாளருக்கு நான் நன்றி சொல்ல விரும்புகிறேன்.
மீரா கதிரவன் அருமையான மனிதர். நல்ல மனம் கொண்டவர். என் நல்ல நண்பர். அவர் ஒரு திறமையான இயக்குனர். அவருக்கு யாரிடம் எப்படி வேலை வாங்குவது என்று தெரியும். அவர்தான் என் வாழ்கையை மாற்றியவர். நான் அவருக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். அவர் வாழ்வில் எல்லா நலன்களையும் பெற கடவுளை பிராத்திக்கிறேன்.

எல்லா படங்களுக்கும் நான் ஒரே மாதிரிதான் வேலை செய்கிறேன். என்னுடைய முதல் படம் என்பதாலும் அருமையான Script என்பத்தாலும் அவள் பெயர் தமிழரசி எனக்கு Special. படம் மார்ச்-5 திரைக்கு வருகிறது. எல்லோரும் பார்த்து படம் எப்படி இருக்கிறது என்று நீங்கள் சொல்லுங்கள்.

Saturday 20 February 2010

"என் பெயர் வளப்பக்குடி வீரசங்கர்" அவள் பெயர் தமிழரசி பாடகர்




பிறப்பு: 01:05:1957
சொந்த ஊர்: வளப்பக்குடி (தஞ்சாவூர் மாவட்டம்)
படிப்பு: M.A. தமிழ் இலக்கியம்

குடும்பம்: அப்பா வீரமலை கூலி வேலை செய்யிறவர். அம்மா மீனாம்பாள் காய்கறி வியாபாரம் செய்யிறவங்க. மனைவி செல்வி. மூணு பொண்ணுங்க (ஆனந்த வள்ளி, நித்திலவள்ளி,கற்பக வள்ளி).

இத்தனை நாளா எங்கே இருந்தீங்க.. என்ன செஞ்சிகிட்டு இருந்தீங்க..?

நான் முப்பத்தியேழு வருசமா பாடிக்கிட்டுதாங்கையா இருக்கேன். "அவள் பெயர் தமிழரசி" படம் மூலமா உங்க காதுகளுக்கு எட்டியிருக்கு. ரொம்ப சந்தோசங்கையா. என்னுடைய கலை ஆர்வம் அப்பாகிட்ட இருந்துதான் வந்தது. வசந்தகால தொடக்கமான சித்திரை வைகாசில தஞ்சாவூர் மாவட்ட்டதுல கோவில் திருவிழா நடக்கும். அதுக்கு நாடகங்கள் நடத்துவாங்க. அப்பா நாடகங்கள்ல நடிப்பார். நான் முதன் முதல்ல "ஹரிச்சந்திரா"நாடகத்துல லோகிதாசா நடிச்சேன். அப்போ எனக்கு பன்னண்டு வயசு. என்னோட அப்பா சத்தியகீர்த்தியா நடிச்சார். நாடகம் மூணு நாலு நாள் தான் நடக்கும் ஆனா அதுக்கு ஒத்திகை நாலஞ்சு மாசத்துக்கு முன்னாடியே தொடங்கும்.S.L.ராஜமாணிக்கம் பிள்ளைதான் என் முதல் நாடக குரு.

ஆர்வமெல்லாம் கலைத்துறையில இருந்ததால, "வைரம்" நாடகக் கம்பெனி-ல சேர்ந்துட்டேன். அவங்க வள்ளிதிருமணம், ஹரிச்சந்திரா, சர்வதிகாரி, வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகங்கல்லாம் போடுவாங்க. அதுல இசை அமைப்பாளரா இருந்தவர் குடந்தை A.V.கோவிந்தன். வேளாங்கண்ணி கோவில்ல இன்னமும் அவர் பாடிய பாடல்தான் கொடிப் பாடலா ஒலிக்குது. பன்னண்டு வருஷம் அவர் கூடவே இருந்து இசை கத்துக்கிட்டேன். பாடல்கள் எழுதுற திறமையும் வளர்ந்துது.
நான் செய்யாத வேலையில்லங்கையா; கூலி வேலைக்கு கூட போயிருக்கேன். தஞ்சாவூர் மாவட்டம் அதனால வெத்தல கொடிக்கால் வேல செய்தேன். இருந்தாலும் மனசெல்லாம் பாட்டு மேலதான். பாட்டு தான் நம்ம தொழில்னு கல்யாணமான கொஞ்ச நாள்லயே முடிவு பண்ணிட்டேன்."சிவகங்கை கோட்டைசாமி"அவங்களோட சேர்ந்து கச்சேரிகள் பண்ண தொடங்கிட்டேன். தமிழ்நாடு பூரா நாட்டுபுற பாடல் கச்சேரி செஞ்சிருக்கேன். இதுவரைக்கும் ஆறு கேசெட்டு வெளியிட்டிருக்கேன். "மண்ணிசை", "மூங்கில் இலை மேலே", "நீலக்கருங்குயிலே" நாட்டுபுற பாடல் தொகுப்பும், சிவன், ஐயப்பன், அம்மன் பக்திப் பாடல் கேசெட்டுகளும் வெளியிட்டிருக்கேன். எல்லாம் நானே எழுதி இசையமைச்ச பாடல்கள்.

"அவள் பெயர் தமிழரசி" வாய்ப்பு..

"இலக்கியன்"ங்கற இசையமைப்பாளர் மூலமா "அவள் பெயர் தமிழரசி" இயக்குனர் மீரா கதிரவன் அறிமுகம் கிடைச்சுது. சென்னைக்கு வரச்சொல்லி மூணு பாடல்கள கொடுத்து பாடச்சொன்னாங்கையா.

♥ ஆராரோ ஆரிரரோ...
♥ ஒத்தையடி பாதை..
♥ மாடத்துல ஒளி விளக்கா..
இசைஅமைப்பாளர் விஜய் ஆண்டனி எனக்கு முழு சுதந்திரம் கொடுத்து பாட வச்சாருங்கையா. இயக்குனரும் பாடல்கள கேட்டுட்டு நான் நெனச்ச மாதிரியே வந்துருக்குன்னு சொன்னருங்கையா. பாடலாசிரியர் ஏகாதசி (ஆராரோ ஆரிரரோ...) பாடல கேட்டுட்டு "என் பாடலுக்கு உயிர் கொடுத்துட்டிங்க"ன்னு ரொம்ப சந்தோசப்பட்டு பாரட்டினாருங்கையா. முதல் படத்துலையே மூன்று பாடல்கள் பாட வாய்ப்பு கிடைச்சது ரொம்ப சந்தோசம்.
இன்னக்கி பாடகனா இருக்கேன். இன்னைக்கும் கலைதான் எனக்கு சோறு போடுது. எல்லார்கிட்ட இருந்தும் பாராட்டு கிடைக்குதுங்கையா. ரொம்ப சந்தோசம். கடைசி வரைக்கும் பாடிகிட்டே இருக்கணும். பட்டி தொட்டியெல்லாம் என் பாட்டு கேட்கணும். அதுதாங்கையா என் ஆசை. தொடர்ந்து வாய்ப்புகள் வருதுங்கையா. இப்போ "வெங்கடேஸ்வரா" படத்துல பாடி இருக்கேன். அடுத்து பெயரிடப்படாத ஒரு படத்துக்கு பாடல் பதிவு நடக்குது. Symphonyநிறுவனத்துக்காக பன்னிரண்டு பாடல்கள் அடங்கிய ஒரு Album பாடி இருக்கேன் இன்னும் ஓரிரு மாதங்களில் வெளியாகும். எல்லாம் அந்த சிவனோட ஆசிர்வாதம்.

Thursday 18 February 2010

"என் பெயர் வீரசந்தானம்" அவள் பெயர் தமிழரசி நடிகர்




பிறப்பு: 10:04:1947
சொந்த ஊர்: திருநாகேஸ்வரம் (கும்பகோணம்)
படிப்பு: ஓவியக் கல்லுரி (1966-1972)
பட்டயப்படிப்பு (Painting)
பட்டயமேற்படிப்பு (Textile)
மொத்தம் ஆறு ஆண்டுகள்
அங்கீகாரங்கள்/விருதுகள்: Masters Craftsman தேசிய விருது
(குடியரசுத்தலைவர் வெங்கட்ராமன்)
சித்ரகலா விருது
குடும்பம்: அம்மா: பொன்னம்மாள்: அப்பா: வீரமுத்து. தங்கை: சந்திரா. மனைவி: சாந்தி, இல்லத்தரசி. (காதல் திருமணம்) கலப்புத் திருமணம். இரண்டு மகள்கள். சங்கீதா, சரிகா. மருமகன்கள்தான் என் மகன்கள். அவர்கள் நிறைய படித்து, நல்ல பதவி, வசதியோடு வெளிநாடுகளில் வாழ்கின்றனர். எனினும் ஒரு எளிமையான சமூகப்போராளியான என்னை அப்படியே ஏற்றுக் கொண்டனர்.

இதுவரை நீங்கள்...

கலை இலக்கிய நண்பர்களுக்கு மரபு சார்ந்த ஓவியர். எதிர்பாராத இனிய நிகழ்வாக பாலு மகேந்திராவின் "சந்தியாராகம்" (1989) படத்தில் கதை நாயகன் (சொக்கலிங்க பாகவதரின் மகன்/அர்ச்சனாவின் கணவன் வேடம்). நான் மத்திய அரசு பணியில் (மத்திய நெசவாளர் சேவை மையம். Weavers Service Center Gov of India) நாடு முழுவதும் பதினாறு ஆண்டுகள் வேலை செய்திருக்கிறேன். நிறைவான பணி. என் பணியை பாராட்டி தேசியவிருது கூட கொடுத்தார்கள். எனினும், ஒரு கட்டத்தில் விருப்ப ஓய்வு. நிறைய Mural ஓவியங்கள் தமிழ்நாடு முழுவதும் செய்திருக்கிறேன். மற்ற ஓவியர்களைப் போலவே தனி ஆளாகவும் குழுவாகவும் நிறைய ஓவிய கண்காட்சிகளும் நடத்தியிருக்கிறேன். ஓவியம் தொடர்பாக சில வெளிநாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறேன். தொடர்ச்சியாக நம் மரபுசார்ந்த ஓவியங்களை வரைகிறேன். அதற்காக நாடு முழுவதும் சுற்றி நிறைய ஆராய்ச்சிகள் செய்திருக்கிறேன். இது நான் எடுத்துகொண்டிருக்கும் (மரபு சார்ந்த ஓவிய பாணி) ஒரு கலையை அழியாமல் பாதுகாக்க என்னாலான முயற்சி. பங்களிப்பு. இந்த ஆராய்ச்சி என் ஓவிய பாணியை பின்தொடர நினைக்கும் இளைஞர்களுக்கு நிச்சயம் பயன்படும். நான் ஒரு சமூகப் போராளி. தமிழ் கலாசாரத்தை பாதிக்கும் எந்த சக்தியாக இருந்தாலும் எதிர்த்து போராடிக் கொண்டு இருக்கிறேன்.

சந்தியாராகம்..?

என்னை சில முறை மேடைகளிலும், நேரிலும் பாலுமகேந்திரா பார்த்திருக்கிறார். ஒரு முறை என்னை நேரில் வரச் சொல்லி அழைத்திருந்தார் . நான் அது சம்பிராயமான சந்திப்பாக இருக்கும் என்று தவிர்த்து வந்தேன். நான் சந்திக்கவில்லை என்பதை நண்பரிடம் சொல்லி பாலுமகேந்திரா வருத்தப்பட்டது தெரிந்து, நேரில் போய் பார்த்தேன். நிறைய விஷயங்கள் பேசினோம். பின்னர், சில நிழற்படங்கள் எடுத்தார். அவருக்கு நிழற்படம் எடுப்பது பிடித்தமான விஷயம் என்பதை அறிவேன், அதனால் ஏன் எதற்கு என்று கேட்கவில்லை. பிறகொருநாள் "நீங்க சந்தியாராகம் படத்தில் நடிக்கிறீங்க" என்று சொல்லிவிட்டார்.

 "சந்தியாராகம்" (1989) படத்தில்


ஒரு முறை படப்பிடிப்பில் அர்ச்சனா சொல்லித்தான் இன்னொரு விஷயம் தெரிந்தது. ஒரு விழா முடிந்து பிலிம்சேம்பர் வளாகத்திலிருந்து நான் திரும்பிச்செல்லும்போது (முப்பத்து சொச்ச வயது இளைஞன், தாடி, ஜோல்னா பை, காட்டன் ஜிப்பா) வேகமாக நடந்துபோவதை பாலுமகேந்திரா, தன் காரில் இருந்து பார்த்துக்கொண்டே இருந்தாராம். அப்போதே இந்த வேடத்திற்கு என்னை பொருத்திப் பார்த்திருக்கிறார். (படத்திலும் நான் வேகமாக நடந்து செல்லும் காட்சி ஒன்று உண்டு.)

அவள் பெயர் தமிழரசி..

மீரா கதிரவன் தன் கதையில் வரும் ஒரு வேடத்திற்கு என்னை பொருத்திப் பார்த்திருக்கிறார். கதையை தெரிந்த அவரது உதவி இயக்குனர் ராஜேந்திரனும் நான் பொருத்தமாயிருப்பேன் என்றதும், எனக்கு கதையை படிக்கக் கொடுத்தார்கள். கதையை படித்ததும் எனக்கும் அந்த வேடம் மிகவும் பிடித்துப் போனது. இந்த கதைக்களம் இதுவரை யாரும் தொடாதது. கிட்டத்தட்ட எல்லோரும் மறந்து போன, அந்த வலி நிறைந்த கதைக்களத்தில் நடிப்பதில் நான் ஆர்வமாயிருந்தேன். இதில் நடிப்பதை என் கடமையாகவும் உணர்ந்தேன். இதுவரை நான் தலைமுடியை எடுத்ததே இல்லை. இதில் என் வயதுக்கு மீறிய வேடம் என்பதால் முன்தலையில் நிறைய முடியை சவரம் செய்து வயதான தோற்றத்தில் நடித்திருக்கிறேன்.

சந்தியாராகம் Vs அவள் பெயர் தமிழரசி

அன்று "சந்தியாராகம்" படத்தில் எனக்கு சின்ன வேடம் என்று நினைத்துதான் நடித்தேன். ரொம்பநாள் படப்பிடிப்பு நடந்த பிறகுதான் முழுக் கதையையும் படித்தேன். அதிர்ந்து போய் பாலுமகேந்திராவிடம் "இவ்வளவு நல்ல கதையாக இருக்கிறதே, இதில் நான் நடிக்கத்தான் வேண்டுமா..?" என்று கேட்டேன். இன்று அதே கேள்வியைத்தான் "அவள் பெயர் தமிழரசி" கதையை படித்த பின்னர் மீரா கதிரவனிடமும் கேட்டேன். இருவரிடம் இருந்தும் புன்னகை மட்டுமே பதிலாக வந்தது.

"அவள் பெயர் தமிழரசி" யில் ஒரு முக்கிய வேடம் ஏற்று நடிக்கிறேன். நான் அதை வேடம் என்று நினைக்கவில்லை. "நான்தான் அது" என்று நினைத்துதான் பதினெட்டு நாட்கள் வாழ்ந்தேன் (நான் சம்மந்தப்பட்ட படப்பிடிப்பு நடந்த நாட்கள் 18). நான் ஒரு வகையில் அதிஷ்டசாலி. நான் நடிக்கும் படங்களில் உடன் நடிப்பவர்கள் பிரமாதப்படுத்துகிறார்கள். "சந்தியாராகம்" படத்தில் அர்ச்சனா, சொக்கலிங்க பாகவதர். "அவள் பெயர் தமிழரசியில்" கூத்துப்பட்டறை ஜெயராவ், (என்னமா நடிக்கிறார் அந்த பையன்...) "என்னுயிர்தோழன்" ராமா, இவங்கல்லாம் நடிப்பில் அசத்தும்போது நம்மை அறியாமல் காட்சி சிறப்பாக வந்துவிடுகிறது. இவர்கள் யாரும் நடிகர் என்று நான் நினைக்கவே இல்லை. என் மகளாகவும் மகனாகவும் நினைத்துக்கொள்ளும்போது ஏன் நடிக்க வேண்டும்..?

சில விஷயங்கள் செய்ய, நான் சிரமப்பட்டபோது, மீரா கதிரவன் "அய்யா.. இந்த வசனத்திற்கு நீங்க இயல்பா என்ன reaction கொடுப்பீங்களோ அதை செய்யிங்க அவ்வளவுதான்" ன்னார். "இயல்பாக react செய்தால் போதுமே" என்றுதான் பாலு மகேந்திராவும் சொல்வார். Dubbing பேசும்போதும் Screen பார்த்து, உதட்டசைவைப் பார்த்து பேசவில்லை. மீண்டும் ஒருமுறை நடிப்பதாகவே உணர்ந்து காட்சிக்கு தேவையான ஏற்ற இறக்கம் மற்றும் உணர்வுகளுடன் பேசினேன். அதைத்தான் இயக்குனரும் விரும்பினார்.

நடிப்பது பிடித்திருக்கிறதா..?

ஏன் பிடிக்காமல்..? எல்லாமே கலை வடிவம்தானே..!!! இப்போது உள்ள சில தொழில்நுட்பங்கள் என்னை ஆச்சரியப்படுத்துகின்றன. நான் "ஒரு வேலை" செய்தால், தொழில்நுட்பம் எனது வேலையை பத்து மடங்கு செய்துவிடுதிறது. சக நடிகர்கள்தான் என்னோடு நடிச்ச நந்தகி, ஜெயராவ், ராமா எல்லோரும். அவர்களையே திரையில் ஒரு காட்சியில் (Dubbing-ல்) பார்க்கும்போது, எல்லோரும் ( நந்தகி, ஜெயராவ், ராமா) அங்கு அந்தந்த வேடங்களாத்தான் தெரியிறாங்க. என்னை நானே திரையில் பார்க்கும்போதும் அப்படித்தான் உணர்ந்தேன். அந்த வகையில் மீரா கதிரவன் நடிகர்களை கனக்கச்சிதமாக தேர்ந்தெடுத்திருக்கிறார். சரியான நடிகர்களை தேர்வு செய்ததில் தொடங்கி, இந்த படம் முழுக்க அவரது ஆளுமை. படப் பிடிப்புத்தளத்தில் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள், சவால்கள். எல்லாவற்றிற்கும் ஈடுகொடுத்து, சமாளித்து, ஒரு காட்சிக்கு (Scene) சகதொழிலாளர்களிடமும், நடிகர்களிடமும் என்ன வேண்டுமோ அதை மிகச் சரியாக கேட்டு வரவழைப்பதையும் கண்டு பிரமித்திருக்கிறேன்.

ஜெயராவ் & வீரசந்தானம் "அவள் பெயர் தமிழரசி"

பாலுமகேந்திரா படம் பார்த்துவிட்டராமே..?

ஆமாம். பாலு மகேந்திரா, "அவள் பெயர் தமிழரசி" படம் ரொம்ப நல்லா வந்திருக்கு. Im extremely happy for your role. சத்தியமா சொல்றேன்.. தமிழ் சினிமால இப்போதான் முதல் முறையா நம் தமிழ் மக்களின் உண்மையான கிராமத்தை, வாழ்கையை, முகங்களை, மனிதர்களை திரையில் பார்க்கிறேன்"- ன்னு சொன்னார். படம் பர்த்தவங்கல்லாம் "யார் சார் அவர்..? இப்படி நடிசிருக்காரு..!!!"ன்னு கேக்கறதா மீரா கதிரவனும் சொன்னார்.

இன்றைய தமிழ் சினிமா...

பாரதிராஜா, மகேந்திரன், பாலுமகேந்திரா படங்களுக்குப் பிறகு தங்கர் பச்சானின் "அழகி". நம் மக்களின் சந்தோசங்களை, சோகங்களை, பிரச்சனைகளை திரைப்படம் எடுக்கும் படைப்பளிகளையே நான் மதிக்கிறேன். அவர்களுடன்தான் இணைந்து வேலை செய்ய விரும்புகிறேன். "பசங்க"ன்னு ஒரு படம் வந்துது. அதை மக்கள் கொண்டாடினாங்களே. அந்த டைரக்டர் ஆசியாவிலேயே முதல் முறையா "தங்க யானை" பரிசு வாங்கி கிட்டு வந்தார்.. யாரும் கண்டுக்கலையே. சினிமாகாரங்க யாரவது அந்த பையனுக்கு (பசங்க இயக்குனர் பாண்டிராஜ்) பாராட்டு விழா எடுத்தாங்களா? இல்லையே..!!! விமர்சனம் ஒரு கலை. ஒரு சிலரைத் தவிர, இங்கு நல்ல கலை, இலக்கிய, சினிமா விமர்சகர்கள் இல்லை. கதை சுருக்கத்தை சொல்வதை மட்டுமே விமர்சனம் செய்வதாக நினைக்கிறார்கள். இதனால் சில நல்ல படங்களும் கவனிப்பாரற்று போகின்றன. நேர்மையான படைப்பாளி சொர்ந்துபோகிறான். அதுதான் சின்ன வருத்தம். நிறைய புதிய இளைஞர்கள் வருகிறார்கள். புதிய களங்களில் கதை சொல்கிறார்கள். சந்தேகமில்லாமல், இன்றைய தமிழ் சினிமா ஆரோக்கியமாக இருக்கிறது.

உங்கள் வாழ்வில் "அவள் பெயர் தமிழரசி"..?

"அவள் பெயர் தமிழரசி" கதை ஒரு நாவலாக வந்திருந்தால் சாகித்ய அகடமி விருது கிடைத்திருக்கும். அவ்வளவு வலுவான கதை. தமிழர்களின் கலாச்சாரம் பற்றிய ஆராய்ச்சி செய்தால், அவள் பெயர் தமிழரசி படத்தை தவிர்க்க முடியாது. அப்படிப்பட்ட முக்கியத்துவம் வாய்ந்த படமாக இருக்கும். என் சுயசரிதையை தொடர்ந்து எழுதிவருகிறேன். அதில் "அவள் பெயர் தமிழரசி"க்கு ஒரு முக்கிய இடம் உண்டு. எந்த காலத்திலும், ஒரு உண்மையான கலைஞன் தோற்றதாக சரித்திரம் இல்லை. சில நேரம் அவன் சிரமத்திற்கு உள்ளாகிறான். அவ்வளவுதான். ஆனால், ஒரு ஆலமரத்தின் வேர் மிகஆழமாக பதிந்திருப்பதை போல ஒரு படைப்பாளியின் வேர்கள் ஆழப்பொதிந்தவை. அப்படிப்பட்ட ஒரு கலைஞன் மீரா கதிரவன். காலம் அவன் மிகச்சிறந்த படைப்பாளி என்பதை காட்டும். மக்கள் எப்போதும் நல்ல சினிமாவுக்காக ஏங்குகிறார்கள். காத்திருக்கிறார்கள். அப்படிப்பட்ட தரமான படங்கள் வரும்போது கொண்டாட தயாராக இருக்கிறார்கள். நடிச்சி முடிச்சிட்டு "அவள் பெயர் தமிழரசி" படம் பார்த்தப்போ அது "என் படமா"தெரியுது. நீங்க படம் பார்த்தா "உங்க கதையா"இருக்கும். ஒவ்வொருத்தருக்குமான விஷயம் இந்த படத்துல இருக்கு. மக்கள் கொண்டாட காத்திருக்கிறார்கள்.

இனி..

'சந்தியா ராகம்' (1989) படத்திற்குப் பிறகு நிறைய வேடங்கள் தேடி வந்தன. நல்ல கதைக்களம் இல்லாததால் எதிலும் நடிக்கவில்லை. "அவள் பெயர் தமிழரசி"க்குப் பிறகு, வ.கவுதமன் இயக்கும் "மகிழ்ச்சி" படத்தில் ஒரு வேடத்தில் நடிக்கிறேன். இப்போது தமிழ் சினிமா நல்ல திசையில் பயணிப்பதாக நினைக்கிறேன். இயல்பான யதார்த்தமான நல்ல படங்களில் தொடர்ந்து நடிக்க விரும்புகிறேன்.

Tuesday 16 February 2010

"என் பெயர் ஏகாதசி" அவள் பெயர் தமிழரசி பாடலாசிரியர்

ஏகாதசி
பாடலாசிரியர்


பிறப்பு: 26-12-1975
படிப்பு: B.A., தமிழ் இலக்கியம்
சொந்த ஊர்: பணியான் (மதுரை மாவட்டம்)
இதற்கு முந்தய பணி: திரைப்பட உதவி/இணை இயக்குனர்
பயிற்சிப் படங்கள்/இயக்குனர்கள்:
கிங் (2002) பிரபு சாலமன்
கண்ணும் கண்ணும் (2008) G.மாரிமுத்து
மயிலு (2010) ஜீவன்

குடும்பம்..? அப்பா கழுவத் தேவர்; அம்மா பூவாயி. இருவரும் விவசாய வேலை செய்பவர்கள். வீட்டுக்கு ஒரே பிள்ளை. மனைவி சலோமி. காதல் திருமணம். மகன் கவிராஜன்.

கலை ஆர்வம் எப்படி?

அம்மா பிறந்த வீட்டில்தான் வளர்ந்தேன். அமத்தாவும் (அம்மாவின் அம்மா) சீயானும் (அம்மாவின் அப்பா) தான் என் கற்பனைக்கு விதை போட்டவர்கள். இருவரும் அற்புதமான கதை சொல்லிகள். சீயான் சொல்லும் விக்ரமாதித்தன் கதைகளும், அமத்தா சொல்லும் வாய்மொழி (ராஜா ராணி) கதைகளும் கண்முன்னே காட்சிகளாய் விரியும். அமத்தா சொல்லும் கதைகளுக்கு "உம்ம்ம்.." கொட்டிக்கொண்டே தூங்கிப்போவேன். சீயான் கதை சொல்லிவிட்டு கேள்விகள் கேட்பார். சிந்திக்க வைக்கும் கேள்விகள் அவை.

என் தாய் மாமன்களின் நண்பர்கள்தான் என் நண்பர்கள். என் கடைசி மாமா மத்திய காவல் படையில் சேர்ந்ததும் அவரது நண்பர் சுந்தரபாண்டியனுக்கு நான் தவிர்க்க முடியாத நண்பனாகிவிட்டேன். மிக இளம் வயதில் அவருடன் சேர்ந்து மதுரையில் பார்த்த "கலை இலக்கிய இரவு" உண்மையான கலை, கலைஞர்கள், இலக்கியம், இவற்றை அறிமுகம் செய்தது. அதில் நான் மயங்கிப் போனேன். அவருடன் சேர்ந்து நடனம், சிலம்பம், நாடகம், கையெழுத்து பத்திரிக்கை, என்று பயணித்து. சினிமாவில் சேர சென்னை வந்துவிட்டேன்.

திருப்புமுனை..?

அம்மாவின் கண்ணீருக்கு ஆறுதலாய் இருந்தவை சிவாஜிகணேசன் படங்கள். என்னை இடுப்பில் சுமந்தபடி டென்ட் கொட்டகைகளுக்கு கூட்டிப் போவாள். அவள் அழும்போது நானும் சேர்ந்து அழுவேன். கண்ணீரில் நனைந்த அம்மாவின் சேலை வாசனை இப்போதும் நினைவில் இருக்கிறது. தமிழ் நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கம் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு நான் பாடல்கள் எழுதுவேன். அம்மாவின் சேலையை பற்றி ஒரு பாடல் எழுதினேன். அது கலை இலக்கிய ரசிகர்களிடையே பிரபலமானது.

ஆத்தா ஒஞ் சேல - அந்த; ஆகாயத்தைப் போல...
தொட்டி கட்டித் தூங்க; தூளிகட்டி ஆட...
ஆத்துல மீன் பிடிக்க... அப்பனுக்கு தல தொவட்ட...
பாத்தாலே சேத்தணைக்கத் தோணும் - நாங்
செத்தாலும் என்னப் போத்த வேணும்
....................
அக்கா கட்டி பழகினதும்; ஆடு கட்டி மேச்சதுவும்
ஒஞ்சேல தானே; வண்ணப் பூஞ்சோல தானே...
....................
மயிலிறகா ஒஞ்சேல மனசுக்குள்ள விரியும் - ஓங்..
வெளுத்த சேலைத்திரி வெளக்கு போட்டா எரியும்...

இந்த பாடலை கேட்கும் யாரும் கலங்கி விடுவார்கள் அல்லது அழுதுவிடுவார்கள். இந்த பாடல் மதுரை அமெரிக்கன் கல்லூரி, அருளானந்தா கல்லூரி பாடத் திட்டங்களில் சேர்க்கப்பட்டுள்ளது. எனக்கு நிறைய பாமர ரசிகர்களையும் திரைப்பட வாய்ப்பையும் பெற்றுத்தந்தது.

"அவள் பெயர் தமிழரசி" வாய்ப்பு...?

அலங்காரமான வார்த்தைகள் இல்லாமல் இயல்பான மண்ணின் மணத்தோடு "அவள் பெயர் தமிழரசி" படத்திற்கு பாடல்கள் வேண்டும் என மீரா கதிரவன் நினைத்திருக்கிறார். அப்படி எழுதும் புதியவர்களை தேடியிருக்கிறார். அவரது இணை இயக்குனர் தமிழரசன் மூலமாக மீரா கதிரவனை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

இயக்குனர் எப்படி வேலை வாங்கினார்..?

முதலில் எனக்கு கொடுக்கப்பட்டது குழந்தைகள் பாடும் பாடலுக்கான சூழல். சினிமாத்தனமில்லாமல் கிராமங்களில் குழந்தைகள் ஆடிப்பாடும் உற்சாகமான பாடலாக இருக்க வேண்டும் என்று இயக்குனர் சொன்னார். நான் எழுதிய "குஜு குஜு குஜு குஜு கூட்சு வண்டி.." பாடல் அவருக்கு திருப்தி.

பின்னர் "அவள் பெயர் தமிழரசி" முழு கதையையும் எனக்கு படிக்க கொடுத்தார். கதை என்னுள் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இப்படி ஒரு அற்புதமான கதையில் பாடல்கள் எழுத அழைத்திருக்கிறாரே என்ற திருப்தியில் இன்னும் நிறைய உழைத்தேன். ஒவ்வொரு பாடலாக மொத்தம் ஐந்து பாடல் எழுதும் வாய்ப்பை கொடுத்தார்.

♥ குஜு குஜு குஜு குஜு கூட்சு வண்டி...
♥ நீ ஒத்த சொல்லு சொல்லு...
♥ வடக்கா தெற்கா கிழக்கா மேற்கா...
♥ எத்தனையோ கதை உண்டு...
♥ ஆராரோ ஆரிராரோ...

இப்போது உங்கள் மனநிலை...

வெளி உலகிற்கு அதிகம் தெரியாமல் இருந்த எனக்கு மீரா கதிரவன் தன் முதல் படத்திலேயே ஐந்து பாடல்கள் எழுத வாய்ப்பு தந்திருக்கிறார். அவர் என் மீது வைத்த நம்பிக்கையை நான் என்றென்றும் நன்றியோடு நினைத்திருப்பேன். இதை போன்ற கதை சூழல் இதுவரை சொல்லப் படவில்லை. இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு நேர்மையான பதிவாக இருக்கும். இதில் நானும் பங்கு கொண்டதை பெருமையாக நினைக்கிறேன்.

நான் எழுதிய ஐந்து பாடல்களும் பாடல் பல்லவி எழுதப்பட்டு பின்னர் மெட்டமைக்கப் பட்டவை. பாடல் சிறப்பாக வரவேண்டும் என எண்ணி நான் நிறைய வரிகள் எழுதி கொடுத்தேன். அதிலிருந்து இயக்குனர் ரசனையோடு சில அழகான வரிகளை தேர்ந்தெடுத்தார். வடக்கா தெற்கா பாடலில் வரும் வரிகள் "அழுத கண்ணீருல அரக்காணி நனைஞ்சிருமே.. உழுது வெதச்சாலும் ஒரு போகம் வெளஞ்சிருமே.." ஒரு நல்ல ரசனை உள்ள இயக்குனரோடு பணிசெய்தது இன்னும் கூடுதல் திருப்தி.

நான் புதியவன் என்று நினைக்காமல் இசைஅமைப்பாளர் விஜய் ஆன்டனி முழு சுதந்திரம் கொடுத்து பாடல்கள் எழுத சொன்னார். நல்ல பொருத்தமான குரல்களை தேர்ந்தெடுத்து பாட வைத்திருக்கிறார். பாடல்கள் எல்லாம் பிரபலம் அடைந்திருப்பது மகிழ்ச்சி. என்னை ஆதரிக்கும் சொந்த ஊர் நண்பர்கள் துளசி, விஜி, என்னுள் கலை ஆர்வத்தை வளர்த்த சுந்தரபாண்டியன், இயக்குனரிடம் அறிமுகம் செய்த தமிழரசன் இவர்களை நன்றியோடு நினைக்கிறேன்.

உங்கள் பேச்சில் நல்ல பக்குவம் தெரிகிறதே...

வளர்ந்த வறுமையான சூழல், சொந்த ஊரில் பார்த்து பழகிய சக மனிதர்களின் கடின உழைப்பு, வறுமை, வாசித்தல் பழக்கம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்க பணிகள், வீதி நாடகங்கள், சினிமா உதவி இயக்குனர் பணி, இவை காரணமாக இருக்கலாம்.

இப்போ என்ன செய்றீங்க..?

திட்டக்குடி, ஆடுகளம், மயிலு படங்களில் பாடல்கள் எழுதி இருக்கிறேன். இன்னும் பெயரிடப்படாத சில படங்களுக்கும் எழுதி வருகிறேன். திரைப்படம் இயக்க முயற்சி செய்துகொண்டிருக்கிறேன்.

வாழ்த்துகள்

"என் பெயர் தனஞ்சயன்" அவள் பெயர் தமிழரசி தயாரிப்பாளர்

"என் பெயர் தனஞ்சயன்"
அவள் பெயர் தமிழரசி தயாரிப்பாளர்
பிறப்பு: May 14
படிப்பு: MBA (Marketing, Human Relations, IT)
பணி: Moser Baer நிறுவனத்தில் தலைமை நிர்வாகம்
அங்கீகாரம்/விருதுகள்:
மக்கள் தொலைக்காட்சி விருது: சிறந்த படம் "பூ" 2008
தமிழக அரசு மாநில திரைப்பட விருது: பெண்களை உயர்வாக சித்தரிக்கும் படம் "பூ" (2008)
Jaya TV விருது: சிறந்த புதுமுக தயாரிப்பாளர் "பூ" 2008


குடும்பம்...
அம்மா ஜகதம்மாள், அப்பா கோவிந்த். மனைவி லலிதா, இரண்டு மகள்கள் ரேவதி ஹரிதா. அப்பாவுக்கு சினிமாவில் ஆர்வமில்லை. அம்மா சினிமா ப்ரியை என் சிறு வயது முதலே நிறைய தமிழ் தெலுங்கு சினிமா (வாரத்திற்கு இரண்டு) கூட்டிப்போவார். "ஒருவன் தனக்கு விருப்பமுள்ளதை மட்டுமே செய்யவேண்டும்" என்ற தத்துவத்தில் எனக்கு நம்பிக்கை உண்டு. என் விருப்பங்களுக்கும் லட்சியத்திற்கும் பக்க பலமாக இருப்பது என் மனைவி.

லட்சியம்...
நான் சம்பந்தப் பட்ட துறையில் ஒரு சிறந்த நிர்வாகியாகவும் முன்னோடியாக இருக்க விரும்புகிறேன். எதிர்காலத்தில் பெரிய நடிகர்களை வைத்து தரமான பொழுதுபோக்கு படங்களை தயாரிக்க விருப்பம். தமிழ் திரைப்படங்களை இயக்கவும் விரும்புகிறேன்.

"Moser Baer என்றால் தரமான படங்கள்..." எப்படி சாத்தியமாயிற்று?

குடும்பத்துடன் பார்க்ககூடிய படங்களை மட்டுமே தயாரிப்பது என்பதில் உறுதியாக இருக்கிறேன். இந்த ஒரு அளவுகோல் தரமான கதைகளை தேர்ந்தெடுக்க உதவுகிறது. சிறுவயது முதலே நிறைய கனவுகளோடும் சிந்தனைகளோடும் வளர்ந்தேன். நிறைய படிப்பதும் நல்ல படங்களை விரும்பி பார்ப்பதும் என்னை நல்ல படைப்பாற்றல் உள்ளவனாக வைத்திருக்கின்றன. கற்றுக்கொள்ளும் ஆர்வமுள்ள யாரும் படைப்பாளி ஆகலாம். Ego இல்லாமல் சக தொழிலாளர்களுடன் வெளிப்படையாக பழகுவது, விமர்சனங்களை பக்குவமாக ஏற்றுக்கொள்வது இவையும் என் பலங்கள். முன்பை விட இப்போது திரைப்படத் துறை கட்டமைப்பு, இயங்கும் முறை பற்றி நிறைய தெரிந்து கொண்டுள்ளேன். தொடர்ந்து தரமான படங்களை மட்டுமே நீங்கள் எதிர்பார்க்கலாம்.

"அவள் பெயர் தமிழரசி" தயாரிக்க காரணம்?

கதையை படித்தவுடன் மிகவும் பிடித்துவிட்டது. உடனே மீரா கதிரவனை அழைத்துப் பேசினேன். அவர் "அவள் பெயர் தமிழரசி" படத்தை குறும் படமாக இயக்கி கொண்டு வந்திருந்தது அவரது மனத் தெளிவையும் பொறுப்புணர்ச்சியையும் சொன்னது. இதே போல் படத்தை எடுத்துவிடுவார் என்ற நம்பிக்கையை கொடுத்தது. இந்த படத்தின் backdrop இதுவரை சொல்லப் படாதது. மிகவும் புதிய கதைக்களம்.



"அவள் பெயர் தமிழரசி" படக் குழுவினர்?

இயக்குனர் மீரா கதிரவன் மிகவும் பொறுப்புணர்ச்சியும் , சினிமாவின் மீது தீராத காதலும், திறமையும் கொண்டவர். அவருக்கென்று தமிழ் சினிமாவில் ஒரு இடம் நிச்சயம் உண்டு. விஜய் ஆண்டனியும் மீரா கதிரவனும் இணைந்து தரமான பாடல்களை கொடுத்துள்ளனர். பாடல்கள் ஏற்கனவே பிரபலமடைந்துள்ளன. ஒளிப்பதிவாளர் முத்தையாவும் எடிட்டர் ராஜா முகமதுவும் மிகுந்த ஈடுபாட்டுடன் உழைத்துள்ளனர். இந்த கதைப்படி கதாநாயகனின் உடலமைப்பில் மூன்றுக்கும் மேற்பட்ட உருவ மாற்றம் தேவைப்பட்டது. அதனால் நிறைய மாதங்கள் காத்திருந்து நேரம் செலவிட்டு எடுக்க வேண்டி இருந்தது. (கிட்டதட்ட ஐந்து ஷெட்யூல்) வெயில் மழை என்று காத்திருந்து படப்பிடிப்பு நடத்தினோம். படக் குழுவினர் அனைவரும் மிகுந்த ஈடுபாட்டுடனும் அர்ப்பணிப்புடனும் வேலை செய்தனர்.


முழுமையாக படம் பார்த்தபோது எப்படி உணர்ந்தீர்கள்?

படத் தயாரிப்பில் நிறைய சவால்கள் கஷ்டங்கள். எல்லா கஷ்டங்களும் படத்தை முழுமையாக பார்த்த போது சந்தோசமாக மாறிவிட்டது. படம் மிகவும் அருமையாக வந்திருக்கிறது. சினிமாத்தனம் துளியும் இல்லாத, கிராம வாழ்வை இயல்பாக சொல்லும் யதார்த்தமான படம். It is a bold attempt by the Director. I am hopeful and confident that the audience would love it. படம் பார்க்கும் ஒவ்வொருவருக்கும் படம் நிச்சயம் பிடிக்கும்.

"என் பெயர் மூர்த்தி" அவள் பெயர் தமிழரசி கலை இயக்குனர்

என் பெயர் மூர்த்தி
கலை இயக்குனர் (அவள் பெயர் தமிழரசி)


பிறப்பு: 14-04-1981
படிப்பு : Bachelor of Fine Arts (Painting 1999-2003)அரசு கவின் கல்லூரி சென்னை
பயிற்சி படங்கள் : Asst Art Director வசூல்ராஜா MBBS, அட்டகாசம், தொட்டி ஜெயா, வெயில், டிஷ்யூம், வாழ்த்துகள், பூ
கற்றுக்கொடுத்தவர்கள்: திரு.மோகன மகேந்திரன் & திரு.வீர சமர்

குடும்பம்..?
அப்பா: சுப்பராயன்; அம்மா: செல்வாம்பாள். அவங்களுக்கு சினிமா பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அப்பா அடிக்கடி வேற எதாவது நல்ல சம்பாத்தியம் உள்ள வேலைக்கு போயிருக்கலாமேம்பார். பையன் என்ன பண்றான்னு யாரவது கேட்டா அப்பா "அவன் படம் போடறவன்" ன்னு சொல்வார். அம்மா, "பையன் ஆர்ட் டைரக்டர்"-ன்னு சொல்லுவாங்க. என் நன்றிக்குரியவர்கள் என் அண்ணா அண்ணி. அண்ணா செல்வராஜ் மின்வாரியத்துல வேலை செய்யிறார்.

அவள் பெயர் தமிழரசி வாய்ப்பு..? 
இதற்கு முன் பூ படத்தில் உதவி கலை இயக்குனராக வேலை செய்தது "அவள் பெயர் தமிழரசி" இயக்குனர் மீரா கதிரவனை சந்திக்க உதவியது. என் முதல் படம் எப்படி அமைய வேண்டும் என்று நினைத்தேனோ அதே போல் "அவள் பெயர் தமிழரசி" அமைந்தது.


படத்தில் சவாலாக அமைந்த சூழல்கள்?
இதற்கு முன் நான் பயிற்சியாளராக பணியாற்றிய மோகன மகேந்திரனும் வீரசமர் அண்ணாவும் எப்படிப்பட்ட சவாலான சூழலாக இருந்தாலும் கலை இயக்கம் செய்ய என்னை தயார் செய்து இருந்தனர். இயக்குனர் மீரா கதிரவன் என்னிடம் அன்பாகத்தான் வேலை வாங்கினார். நான் அவரை அண்ணா என்று தான் கூப்பிடுவேன். அவரிடம் அதிகம் திட்டு வாங்கவில்லை. (அப்போ திட்டு வாங்கி இருக்கீங்க... :-)

முதல் விமானப் பயணம்?
நன்றாக இருந்தது. சென்னையில் இருந்து பூனா போனோம். நான், ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா, இயக்குனர் மீரா கதிரவன். உண்மையில் நான் விமானப் பயணத்தை அனுபவிக்கவில்லை. பூனா சென்று இறங்கியதும் செய்யவேண்டிய திரைப்பட பணிகள் தான் மனதில் ஓடியது.

லட்சியம்?
என் மானசீக குரு கலை இயக்குனர் சாபு சிரில் அவர்களிடம் பாராட்டு பெற வேண்டும். காரணம்..? எனக்கு மிகவும் பிடித்தவர். நம்மை விட நம் தொழிலில் உயர்ந்தவர் பாராட்டினால் ஒரு பொறுப்பு வரும் அதான். என் வெகு நாள் ஆசை ஒரு நூறு பேருக்கு ஒரு வேளை சோறு போட வேண்டும்.

வாழ்த்துகள்

இயக்குனர் "மீரா கதிரவன்" பேட்டி

இயக்குனர் "மீரா கதிரவன்" பேட்டி

நன்றி: "விளம்பரம்" இதழ் (கனடா) Dec 15, 2009
நேர்காணல்: பாலு சத்யா

குறிப்பு: ஒவ்வொரு வண்ணத்தையும் தனித்தனியாக Click செய்து படிக்கவும்.. :-)





ஆண்கள் அழுவதில்லை


ஓர் ஆணுக்கு மிகப்பெரிய துக்கம் ஒன்று நேரும்போது, சமூக கோட்பாடுகளுக்கு பழக்கப்பட்டு வெளிப்படையாக அவன் அழாமல் இருக்கலாம். அவன் மனம் அழுவதை யார் சொல்லுவார்கள்?

(அழுது துக்கத்தை கரைப்பது மன நலனிற்கு நல்லது என்று உளவியல் சொல்கிறது)

பகிர்ந்துகொள்ளப்படும்போது துக்கம் பாதியாகக் குறைகிறது. யாருமே இல்லாத ஒருவன் இடிந்து போனால் அவன் துக்கத்தை எப்படி சொல்வான் யாரிடம் சொல்வான்? சாய்ந்துகொள்ள ஒரு தோள் தேடும், கதறி அழ ஒரு மடி தேடும் ஒருவனின் குரல் எப்படி இருக்கும்? ஆயிரம் கத்திகளைக் கொண்டு இதயத்தை கூறுபோட்டு கிழித்தெறியும் அந்த சொல்லமுடியாத துக்கம் குரலாக வெளிப்பட்டால் எப்படி இருக்கும்?

சொல்லி அழுதால் தீரும் சோகம் உண்டு; சொல்லி அழுதாலும் தீராத சோகத்தை, சொல்லி அழ முடியாத துக்கத்தை எப்படி இறக்கி வைப்பது?

சொல்லமுடியாத அந்த துக்க மன நிலையை பிரதிபலிப்பதாய் ஒரு குரல் அசரீரியாய் (தாலாட்டாக) ஒலித்தால் எப்படி இருக்கும்?

இப்படித்தான் இருக்கும்...

http://www.youtube.com/watch?v=riPopVCeftQ&feature=related

படம்: அவள் பெயர் தமிழரசி
பாடல்: ஏகாதசி
குரல்: வளப்பைகுடி வீரசங்கர்
இசை: விஜய் ஆண்டனி

ஆராரோ ஆரிராரோ என் கண்ணே ஆரிராரோ ஆராரோ
ஏ.. வெய்யிலடையும் பனங்காடு மழையடையும் குத்தாலம்
நாமடையும் கூட்டுக்குத்தான் என் கண்ணே நல்ல சேதி எக்காலம்..?
என் கண்ணே நல்ல சேதி எக்காலம்?
மாசத்துல ஒரு நாளு.. என் கண்ணே
மாசத்துல ஒரு நாளு.. சந்திரரும் தூங்குவாக
ஓங்.. தூக்கம் பாக்கத்தானே என் கண்ணே
சூரியரும் ஏங்குவாக...
ஓங்.. தூக்கம் பாக்கத்தானே என் கண்ணே நவமணியே
சூரியரும் ஏங்குவாக...
நீ மல்லாந்து தூங்கும் அழக..
என் கண்ணே... மரக்கா போட்டு அளக்கணுமே
என் கண்ணே நீ குப்புறக்கா தூங்கும் அழக கூட (கூடை)போட்டு அளக்கணுமே
குப்புறக்கா தூங்கும் அழக என் கண்ணே கூட போட்டு அளக்கணுமே


உன்ன தூங்க விட்டு நான் ஓடுவேண்டி கழநிக்குதான் அடி
உன்ன தூங்க விட்டு நான் ஓடுவேண்டி கழநிக்குதான்
ஓங் நெனப்பில் விரலறுப்பேன் அடி ஆத்தே நான் எங்கே கருதறுப்பேன்
ஓங் நெனப்பில் விரலறுப்பேன் அடி ஆத்தே நான் எங்கே கருதறுப்பேன்
பிறந்தது ஒரு சீமே.. என் கண்ணே வளர்ந்தது ஒரு சீமே
நம்ம வயித்த கழுவத்தான் என் கண்ணே வாழுறது ஒரு சீமே
நம்ம வயித்த கழுவத்தான் என் கண்ணே வாழுறது ஒரு சீமே


சீட்டெடுக்கும் சின்ன கிளி ஏங் சீதக்கி (சீதை) என்ன சொல்லும் அந்த
சீட்டெடுக்கும் சின்ன கிளி ஏங் சீதக்கி என்ன சொல்லும்
பாட்டெடுக்கும் குயிலு ஒன்னு நல்லதொரு பதிலுதான் சொல்ல வேணும்
பாட்டெடுக்கும் குயிலு ஒன்னு நல்லதொரு பதிலுதான் சொல்ல வேணும்


உங் கையிரண்ட மோந்து பார்த்தா கற்பூர வாசம் வரும்.
உன் கையிரண்ட மோர்ந்து பார்த்தா கற்பூர வாசம் வரும்
என் கண்ணே நவமணியே
உன் பாதம் தொட்ட மண்ணு
பொன்னாக பூத்து வரும் என் கண்ணே
உன் பாதம் தொட்ட மண்ணு என் கண்ணே
பொன்னாக தொலங்கி வரும்
ஆராரோ ஆரிராரோ... என் கண்ணே... ஆரிராரோ ஆராரோ...


தாலாட்டுப் பாடல்கள் சோகத்தின் வடிகால் எனினும், ஆண் குரலில் இப்படி ஒரு உருக்கமான தாலாட்டுப் பாடலை கேட்பது புதிய அனுபவம். அவ்வளவு எளிதாக இந்த குரலை விட்டும் வரிகளை விட்டும் விலகி வந்துவிட முடியாது.

குரலுக்கு எத்தனையோ அடைமொழிகள் (இனிமையான குரல், வளமான குரல், கணீர் குரல்) இருந்தாலும், "Haunting Voice" என்று ஒரு Adjective உண்டு. இந்த பாடலுக்கு சொந்தக்காரரின் குரல் அப்படிப்பட்ட துரத்தும் குரல்.

இந்த பாடலை ஒரு முறை கேளுங்கள். இந்த Solitary குரலையும் அடிவயிற்றிலிருந்து பிசைந்தெழும் துக்கத்தையும் விட்டு அகல முடியாது. ஒரு முறை கேட்டாலே வேறு வேலை செய்ய முடியாது. It will follow you in all possible means, right from the first listening.

தாள வாத்திய இசை எதுவும் சேர்க்கப்படாத இந்த பாடல் சுகமான சோகம்.

படம்: அவள் பெயர் தமிழரசி
பாடல்: ஏகாதசி
குரல்: வளப்பைகுடி வீரசங்கர்
இசை: விஜய் ஆண்டனி

http://www.youtube.com/user/lap845#p/a/u/1/6gJsAp34OBw

ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலோ ஏலேலே ஏலோ..!!


மாடத்துல ஓளிவிளக்காம் மச்சிவீட்டு சாணிதர
மாடத்துல ஓளிவிளக்காம் மச்சிவீட்டு சாணிதர
அங்கே கூடி வாழ் நீ இல்லம நான் குத்தவசேன் பரணி மேலே
அங்கே கூடி வாழ் நீ இல்லம நான் குத்தவசேன் பரணி மேலே


மகராசி போனாலும் மஞ்சள் வாசம் போகலியே
மகராசி போனாலும் மஞ்சள் வாசம் போகலியே
நெசமாத்தான் அரசிட்டியா நாம ரெண்டு பேர்க்கும் அரளிவெதே
நெசமாத்தான் அரசிட்டியா நாம ரெண்டு பேர்க்கும் அரளிவெதே


மல்லியப்பூ சிரிப்பாலே ஏங் மனச கூறு போட்டியேடி
மல்லியப்பூ சிரிப்பாலே ஏங் மனச கூறு போட்டியேடி
கள்ளம் கபடம் பேசி ஏங் கல் நெஞ்ச கரச்சியேடி
கள்ளம் கபடம் பேசி ஏங் கல் நெஞ்ச கரச்சியேடி
ஏங் கல் நெஞ்ச கரச்சியேடி


உள்ளம் பதறுதடி எண்ணம் சிதருதடி
உள்ளம் பதறுதடி எண்ணம் சிதருதடி
எண்ணம் சிதருதடி
உண்மை காதலுக்கு மனம் ஏங்கி
உண்மை காதலுக்கு மனம் ஏங்கி
கசுஞ்சு உருகுதடி


மனசு கசுஞ்சு உருகுதடி
மனசு கசுஞ்சு உருகுதடி
மனசு கசுஞ்சு உருகுதடி