எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்

எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்
வயது 18 மாநிறம்
Showing posts with label Art director S.S.Moorthy. Show all posts
Showing posts with label Art director S.S.Moorthy. Show all posts

Tuesday, 16 February 2010

"என் பெயர் மூர்த்தி" அவள் பெயர் தமிழரசி கலை இயக்குனர்

என் பெயர் மூர்த்தி
கலை இயக்குனர் (அவள் பெயர் தமிழரசி)


பிறப்பு: 14-04-1981
படிப்பு : Bachelor of Fine Arts (Painting 1999-2003)அரசு கவின் கல்லூரி சென்னை
பயிற்சி படங்கள் : Asst Art Director வசூல்ராஜா MBBS, அட்டகாசம், தொட்டி ஜெயா, வெயில், டிஷ்யூம், வாழ்த்துகள், பூ
கற்றுக்கொடுத்தவர்கள்: திரு.மோகன மகேந்திரன் & திரு.வீர சமர்

குடும்பம்..?
அப்பா: சுப்பராயன்; அம்மா: செல்வாம்பாள். அவங்களுக்கு சினிமா பற்றி எல்லாம் எதுவும் தெரியாது. அப்பா அடிக்கடி வேற எதாவது நல்ல சம்பாத்தியம் உள்ள வேலைக்கு போயிருக்கலாமேம்பார். பையன் என்ன பண்றான்னு யாரவது கேட்டா அப்பா "அவன் படம் போடறவன்" ன்னு சொல்வார். அம்மா, "பையன் ஆர்ட் டைரக்டர்"-ன்னு சொல்லுவாங்க. என் நன்றிக்குரியவர்கள் என் அண்ணா அண்ணி. அண்ணா செல்வராஜ் மின்வாரியத்துல வேலை செய்யிறார்.

அவள் பெயர் தமிழரசி வாய்ப்பு..? 
இதற்கு முன் பூ படத்தில் உதவி கலை இயக்குனராக வேலை செய்தது "அவள் பெயர் தமிழரசி" இயக்குனர் மீரா கதிரவனை சந்திக்க உதவியது. என் முதல் படம் எப்படி அமைய வேண்டும் என்று நினைத்தேனோ அதே போல் "அவள் பெயர் தமிழரசி" அமைந்தது.


படத்தில் சவாலாக அமைந்த சூழல்கள்?
இதற்கு முன் நான் பயிற்சியாளராக பணியாற்றிய மோகன மகேந்திரனும் வீரசமர் அண்ணாவும் எப்படிப்பட்ட சவாலான சூழலாக இருந்தாலும் கலை இயக்கம் செய்ய என்னை தயார் செய்து இருந்தனர். இயக்குனர் மீரா கதிரவன் என்னிடம் அன்பாகத்தான் வேலை வாங்கினார். நான் அவரை அண்ணா என்று தான் கூப்பிடுவேன். அவரிடம் அதிகம் திட்டு வாங்கவில்லை. (அப்போ திட்டு வாங்கி இருக்கீங்க... :-)

முதல் விமானப் பயணம்?
நன்றாக இருந்தது. சென்னையில் இருந்து பூனா போனோம். நான், ஒளிப்பதிவாளர் P.G.முத்தையா, இயக்குனர் மீரா கதிரவன். உண்மையில் நான் விமானப் பயணத்தை அனுபவிக்கவில்லை. பூனா சென்று இறங்கியதும் செய்யவேண்டிய திரைப்பட பணிகள் தான் மனதில் ஓடியது.

லட்சியம்?
என் மானசீக குரு கலை இயக்குனர் சாபு சிரில் அவர்களிடம் பாராட்டு பெற வேண்டும். காரணம்..? எனக்கு மிகவும் பிடித்தவர். நம்மை விட நம் தொழிலில் உயர்ந்தவர் பாராட்டினால் ஒரு பொறுப்பு வரும் அதான். என் வெகு நாள் ஆசை ஒரு நூறு பேருக்கு ஒரு வேளை சோறு போட வேண்டும்.

வாழ்த்துகள்