
விழா தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது.
தயாரிப்பாளர் தனஞ்சயன் அனைவரையும் வரவேற்று பேசினார்.
* முதலில் படத்திலிருந்து பாடல்கள் திரையிடப்பட்டன.
நீ ஒத்த சொல்லு சொல்லு...
குஜு குஜு கூட்சு வண்டி
வடக்கா..தெக்கா
* பின்னர் முன்னோட்டம் திரையிடப்பட்டது

"இயக்குனர் இலக்கியத்தில் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டவன். என்னை மாதம் ஒரு முறையேனும் சந்தித்து தன் சினிமா ரசனையையும், வாசிப்பையும் பகிர்ந்துகொள்வான்.
நல்ல சினிமா வாழ்க்கைப் பதிவிலிருந்து எடுக்கப்படவேண்டும். இவன் காதலின் அழகியலை மட்டும் திரையில் பதிவு செய்ய மாட்டான். மனித உணர்வுகளையும் பதிவு செய்வான். எதிர்காலத்தில் சாதனை இயக்குனர்களின் மத்தியில் இவனும் வீற்றிருப்பான்.
இந்த படத்தின் கதையை என்னிடம் சொன்னான். திரைக்கதையாக்கச்சொன்னேன். பிறகொருநாள் படத்தை ஒரு குறும்படமாக எடுத்து வந்து என்னை ஆச்சரியப் படுத்தினான். அதன் தரத்தில் நான் மயங்கிப் போனேன்.
அந்த குறும்படத்தில் நடித்த பெண்ணையும் ஒளிப்பதிவாளரையும் இதை திரைப்படமாக எடுக்கும்போதும் பயன்படுத்த வேண்டும் என்று சொன்னேன். இன்றைக்கு பார்த்தால் அவர்கள் இருவரும் இந்த படத்தில் இருக்கிறார்கள் மகிழ்ச்சி".

நான் பொது மேடைகளில் அதிகம் காணப்படுவதில்லை என்று எல்லோரும் சொல்கிறார்கள். நான் உங்கள் எல்லோரையும் தூரத்தில் இருந்துகொண்டே ரசிக்கிறேன், நேசிக்கிறேன். உங்கள் எல்லோரையும் எனக்குப் பிடிக்கும். அருகில் இருந்து கொண்டே மனத்தால் விலகி இருப்பதை விட, தூரத்தில் இருந்து மனத்தால் நெருங்கி இருப்பது நல்லதுதானே..?
நடிகர் பார்த்திபன்: உதவி இயக்குனர்களின் பெயரை அழைப்பிதழில் போட்ட முதல் திரைப்படம் இதுதான்.
இயக்குனர் தங்கர் பச்சான்: ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு திரைக்கதை முக்கியம். முழு படத்தின் திரைக்கதையும் தீர்மானிக்கப்பட்ட பின்னர் திரைப்படம் தொடங்கப் படுமானால் நல்ல தரமான படங்கள் கிடைக்கும்.
பாலு மகேந்திரா திரைப்பட இசை ஒலிப் பேழையை வெளியிட ஸக்சேனா பெற்றுக் கொண்டார்.

இயக்குனர்கள் அமீர், சசிகுமார், வசந்த், மிஷ்கின், விநியோகஸ்தர் சங்க தலைவர் அபிராமி ராமநாதன், , நடிகர் பரத், உள்ளிட்டோர் தங்கள் வாழ்த்துக்களை பகிர்ந்துகொண்டனர்.
படக்குழுவினர் இசையமைப்பளர் விஜய் ஆண்டனி, இயக்குனர் மீராகதிரவன், நடிகர் ஜெய், அறிமுக நடிகை நந்தகி, படத்தின் அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.
தயாரிப்பாளர் லலிதா நன்றி கூறினார்
No comments:
Post a Comment