எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்

எழுத்து & இயக்கம்: மீரா கதிரவன்
வயது 18 மாநிறம்

Tuesday 16 February 2010

ஆண்கள் அழுவதில்லை


ஓர் ஆணுக்கு மிகப்பெரிய துக்கம் ஒன்று நேரும்போது, சமூக கோட்பாடுகளுக்கு பழக்கப்பட்டு வெளிப்படையாக அவன் அழாமல் இருக்கலாம். அவன் மனம் அழுவதை யார் சொல்லுவார்கள்?

(அழுது துக்கத்தை கரைப்பது மன நலனிற்கு நல்லது என்று உளவியல் சொல்கிறது)

பகிர்ந்துகொள்ளப்படும்போது துக்கம் பாதியாகக் குறைகிறது. யாருமே இல்லாத ஒருவன் இடிந்து போனால் அவன் துக்கத்தை எப்படி சொல்வான் யாரிடம் சொல்வான்? சாய்ந்துகொள்ள ஒரு தோள் தேடும், கதறி அழ ஒரு மடி தேடும் ஒருவனின் குரல் எப்படி இருக்கும்? ஆயிரம் கத்திகளைக் கொண்டு இதயத்தை கூறுபோட்டு கிழித்தெறியும் அந்த சொல்லமுடியாத துக்கம் குரலாக வெளிப்பட்டால் எப்படி இருக்கும்?

சொல்லி அழுதால் தீரும் சோகம் உண்டு; சொல்லி அழுதாலும் தீராத சோகத்தை, சொல்லி அழ முடியாத துக்கத்தை எப்படி இறக்கி வைப்பது?

சொல்லமுடியாத அந்த துக்க மன நிலையை பிரதிபலிப்பதாய் ஒரு குரல் அசரீரியாய் (தாலாட்டாக) ஒலித்தால் எப்படி இருக்கும்?

இப்படித்தான் இருக்கும்...

http://www.youtube.com/watch?v=riPopVCeftQ&feature=related

படம்: அவள் பெயர் தமிழரசி
பாடல்: ஏகாதசி
குரல்: வளப்பைகுடி வீரசங்கர்
இசை: விஜய் ஆண்டனி

ஆராரோ ஆரிராரோ என் கண்ணே ஆரிராரோ ஆராரோ
ஏ.. வெய்யிலடையும் பனங்காடு மழையடையும் குத்தாலம்
நாமடையும் கூட்டுக்குத்தான் என் கண்ணே நல்ல சேதி எக்காலம்..?
என் கண்ணே நல்ல சேதி எக்காலம்?
மாசத்துல ஒரு நாளு.. என் கண்ணே
மாசத்துல ஒரு நாளு.. சந்திரரும் தூங்குவாக
ஓங்.. தூக்கம் பாக்கத்தானே என் கண்ணே
சூரியரும் ஏங்குவாக...
ஓங்.. தூக்கம் பாக்கத்தானே என் கண்ணே நவமணியே
சூரியரும் ஏங்குவாக...
நீ மல்லாந்து தூங்கும் அழக..
என் கண்ணே... மரக்கா போட்டு அளக்கணுமே
என் கண்ணே நீ குப்புறக்கா தூங்கும் அழக கூட (கூடை)போட்டு அளக்கணுமே
குப்புறக்கா தூங்கும் அழக என் கண்ணே கூட போட்டு அளக்கணுமே


உன்ன தூங்க விட்டு நான் ஓடுவேண்டி கழநிக்குதான் அடி
உன்ன தூங்க விட்டு நான் ஓடுவேண்டி கழநிக்குதான்
ஓங் நெனப்பில் விரலறுப்பேன் அடி ஆத்தே நான் எங்கே கருதறுப்பேன்
ஓங் நெனப்பில் விரலறுப்பேன் அடி ஆத்தே நான் எங்கே கருதறுப்பேன்
பிறந்தது ஒரு சீமே.. என் கண்ணே வளர்ந்தது ஒரு சீமே
நம்ம வயித்த கழுவத்தான் என் கண்ணே வாழுறது ஒரு சீமே
நம்ம வயித்த கழுவத்தான் என் கண்ணே வாழுறது ஒரு சீமே


சீட்டெடுக்கும் சின்ன கிளி ஏங் சீதக்கி (சீதை) என்ன சொல்லும் அந்த
சீட்டெடுக்கும் சின்ன கிளி ஏங் சீதக்கி என்ன சொல்லும்
பாட்டெடுக்கும் குயிலு ஒன்னு நல்லதொரு பதிலுதான் சொல்ல வேணும்
பாட்டெடுக்கும் குயிலு ஒன்னு நல்லதொரு பதிலுதான் சொல்ல வேணும்


உங் கையிரண்ட மோந்து பார்த்தா கற்பூர வாசம் வரும்.
உன் கையிரண்ட மோர்ந்து பார்த்தா கற்பூர வாசம் வரும்
என் கண்ணே நவமணியே
உன் பாதம் தொட்ட மண்ணு
பொன்னாக பூத்து வரும் என் கண்ணே
உன் பாதம் தொட்ட மண்ணு என் கண்ணே
பொன்னாக தொலங்கி வரும்
ஆராரோ ஆரிராரோ... என் கண்ணே... ஆரிராரோ ஆராரோ...


தாலாட்டுப் பாடல்கள் சோகத்தின் வடிகால் எனினும், ஆண் குரலில் இப்படி ஒரு உருக்கமான தாலாட்டுப் பாடலை கேட்பது புதிய அனுபவம். அவ்வளவு எளிதாக இந்த குரலை விட்டும் வரிகளை விட்டும் விலகி வந்துவிட முடியாது.

குரலுக்கு எத்தனையோ அடைமொழிகள் (இனிமையான குரல், வளமான குரல், கணீர் குரல்) இருந்தாலும், "Haunting Voice" என்று ஒரு Adjective உண்டு. இந்த பாடலுக்கு சொந்தக்காரரின் குரல் அப்படிப்பட்ட துரத்தும் குரல்.

இந்த பாடலை ஒரு முறை கேளுங்கள். இந்த Solitary குரலையும் அடிவயிற்றிலிருந்து பிசைந்தெழும் துக்கத்தையும் விட்டு அகல முடியாது. ஒரு முறை கேட்டாலே வேறு வேலை செய்ய முடியாது. It will follow you in all possible means, right from the first listening.

தாள வாத்திய இசை எதுவும் சேர்க்கப்படாத இந்த பாடல் சுகமான சோகம்.

படம்: அவள் பெயர் தமிழரசி
பாடல்: ஏகாதசி
குரல்: வளப்பைகுடி வீரசங்கர்
இசை: விஜய் ஆண்டனி

http://www.youtube.com/user/lap845#p/a/u/1/6gJsAp34OBw

ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலே... ஏலேலே ஏலோ..!!
ஏலேலோ ஏலேலே ஏலோ..!!


மாடத்துல ஓளிவிளக்காம் மச்சிவீட்டு சாணிதர
மாடத்துல ஓளிவிளக்காம் மச்சிவீட்டு சாணிதர
அங்கே கூடி வாழ் நீ இல்லம நான் குத்தவசேன் பரணி மேலே
அங்கே கூடி வாழ் நீ இல்லம நான் குத்தவசேன் பரணி மேலே


மகராசி போனாலும் மஞ்சள் வாசம் போகலியே
மகராசி போனாலும் மஞ்சள் வாசம் போகலியே
நெசமாத்தான் அரசிட்டியா நாம ரெண்டு பேர்க்கும் அரளிவெதே
நெசமாத்தான் அரசிட்டியா நாம ரெண்டு பேர்க்கும் அரளிவெதே


மல்லியப்பூ சிரிப்பாலே ஏங் மனச கூறு போட்டியேடி
மல்லியப்பூ சிரிப்பாலே ஏங் மனச கூறு போட்டியேடி
கள்ளம் கபடம் பேசி ஏங் கல் நெஞ்ச கரச்சியேடி
கள்ளம் கபடம் பேசி ஏங் கல் நெஞ்ச கரச்சியேடி
ஏங் கல் நெஞ்ச கரச்சியேடி


உள்ளம் பதறுதடி எண்ணம் சிதருதடி
உள்ளம் பதறுதடி எண்ணம் சிதருதடி
எண்ணம் சிதருதடி
உண்மை காதலுக்கு மனம் ஏங்கி
உண்மை காதலுக்கு மனம் ஏங்கி
கசுஞ்சு உருகுதடி


மனசு கசுஞ்சு உருகுதடி
மனசு கசுஞ்சு உருகுதடி
மனசு கசுஞ்சு உருகுதடி

No comments:

Post a Comment